2018 ஆம் ஆண்டு முதல் நிர்வாக நடவடிக்கைகளுக்கு டிஜிற்றல் தொழில்நுட்பம்…

2018 ஆம் ஆண்டு முதல் நிர்வாக நடவடிக்கைகளுக்கு டிஜிற்றல் தொழில்நுட்பம்…

2018 ஆம் ஆண்டு முதல் நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு டிஜிற்றல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச வலையமைப்பு செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிற்றல் இலங்கையை உருவாக்குவது அரசாங்கத்தின் கொள்கையாகும். 3500 நிறுவனங்களை ஓர் வலையமைப்பிற்குள் கொண்டுவர எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 3 வருடங்களில் இந்த செயற்பாட்டை முழுமையாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.