யால தேசிய வனப்பூங்காவிற்கு இரண்டு மாதங்களுக்கு பூட்டு…

யால தேசிய வனப்பூங்காவிற்கு இரண்டு மாதங்களுக்கு பூட்டு…

சுற்றுலா விடுதிகளை மீள் புதுப்பித்தல் மற்றும் பூங்காவில் உள்ள மற்ற உள்கட்டமைப்புக்களை மேம்படுத்த யால தேசிய வனப்பூங்கா இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் என வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31ம் திகதி வரையில் தேசிய வனப்பூங்காவின் மண்டல இல 01 மூடப்படவுள்ளது.

யால தேசிய வனப்பூங்கா மூடப்பட்டாலும், பகுதியளவில் இயங்கும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.