பல மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்…

பல மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்…

(FastNews-Colombo) வடக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, அநுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வரை அதிகரிகத்து வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் கேகாலை மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.