‘தளபதி 63’ படத்துக்கு தடை – நீதிமன்றத்தில் வழக்கு…

‘தளபதி 63’ படத்துக்கு தடை – நீதிமன்றத்தில் வழக்கு…

(FASTGOSSIP|COLOMBO) அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என்றும், படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறும்பட இயக்குனர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி ‘தளபதி 63’படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குறும்பட இயக்குநர் செல்வா, தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

கதை திருட்டு குறித்த இந்த வழக்கு வருகிற 23 ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செல்வா தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இயக்குநர் அட்லி, தயாரிப்பு நிறுவனம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தை எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளார்.