நாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…

நாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…

(FASTGOSSIP| COLOMBO) – நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை மற்றும் முகத்திரை தடை தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று(29) இரவு வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.