ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படையாக பணியாற்றத் தயார்: ஜனாதிபதி

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படையாக பணியாற்றத் தயார்: ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு பிரிவினருக்கும் இடையில் நேற்று (05) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்.

நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெற்றிபெறுவதற்கு போராட்டக்களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

இந்தநிலையில் ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட சகல குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக் குழுவினரையும், செயற்பாட்டாளர்களையும் சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது போராட்டக் குழுவினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.