விவசாயிகளின் உர கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுபோகத்தில் நெற் பயிர்செய்கைக்கான விவசாயிகளின் உர கொள்வனவுக்கு, நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

5 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவுக்காக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடலுக்காக 20 ஆயிரம் ரூபாவும், 2 ஹெக்டயருக்கு 40 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.