விசேட தேவை உடையவர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதை இலகுபடுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள்
கொழுமபில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்உத்தேச பொதுத் தேர்தலில், விசேட தேவை உடையவர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதை இலகுபடுத்துவதற்கு விசேட ஏற்பாடுகளை செய்யவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
.
15 மில்லியன் வாக்காளர்களை கொண்ட இலங்கையில், ஒருமில்லியனுக்கும் அதிகமானவர்கள் விசேட தேவை உடையவர்களாகவோ, முதியவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பார்வையற்றவர்களுக்கு விசேடமான வாக்குச் சீட்டு தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.