டில்ஷான் ஆட்டமிழந்த கோபத்தில் நடுவர்களுக்கு மஹேல சிவப்பு சமிஞ்சை

டில்ஷான் ஆட்டமிழந்த கோபத்தில் நடுவர்களுக்கு மஹேல சிவப்பு சமிஞ்சை

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டி நேற்று(2௦) நடைபெற்ற நிலையில் திலகரத்ன டில்ஷானின் சர்ச்சைக்குரிய ஆட்ட இழப்பு குறித்து மஹேல ஜெயவர்தன கருத்துத் தெரிவித்துள்ளார்.

தனக்குச் சொந்தமான ட்விட்டர் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிடுவதாவது; D.R.S அல்லது நடுவரின் தீர்ப்பினை சவாலாகக் கொண்டு தர்க்கிப்பது இன்றைய காலகட்டத்தில் கேலியாகிவிட்டதொன்று.

டில்ஷான் நேற்றைய(20) தினம் 12 ஓட்டங்களை பெற்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா நடுவர்களில் ஒருவரான ஜோன் க்ளோத் இனது மோசமான தீர்ப்பினால் ஆட்டமிழந்தார்.

எவ்வாறாயினும், மூன்றாம் நடுவரின் தீர்ப்புக்காய் மீண்டும் மீண்டும் நிழற்படக் காட்சியின் போது; டில்ஷான் ஆட்டமிழக்கவில்லை என்றே தென்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 7 விக்கெட்களால் வெற்றி கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

 

11100102_10209060575777883_1490536515_n

12476183_10209060575817884_755420305_n

12721740_10209060575857885_1500634004_n