வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை

வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை

வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை, அந்த மாகாணத்தின் ஆளுனர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிபதி ஆதித்ய காந்த மத்துமபடபெதிகேவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் கேள்விப்பத்திர நடைமுறையை மீறி, அரச நிர்மாண ஒப்பந்தங்களை, அரசியல் நண்பர்களுக்கு பெற்றுக் கொடுத்ததன் மூலம், முதலமைச்சரும் அவர் சார்ந்தவர்களும், அரச நிதியினை மோசடி செய்துள்ளனர் எனக் கூறி, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளின் மோசடி நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய அரசாங்கத்தால் சுற்றறிக்கைகள் சில வௌியிடப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சட்டத்தை கவனத்தில் கொள்ளாது அவர்கள் செயற்படுவதாகவும் அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.