எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு…

எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு…

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

எனவே,கொழும்பு துறைமுக வளாகத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழாயினுடனான எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு குழாயில் ஏற்பட்ட கசிவு தொடர்பில்,திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.