சைட்டம் விவகாரம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமிப்பு…

சைட்டம் விவகாரம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமிப்பு…

மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவக (சைட்டம்) விவகாரம் தொடர்பில், ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று(11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்தே இந்தக் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, சைட்டம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாக அரச மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.