ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வயோதிபருக்கு சிறைத்தண்டனை…
2009 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம், ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 76 வயதான வயோதிபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி இன்று(31) தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தெமடகொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.