ஜனாதிபதி திடீரென பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு..

ஜனாதிபதி திடீரென பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு..

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு(02) ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் இரத்துச் செய்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

திலங்க சுமதிபால, சுசில் பிரேம ஜெயந்த, வாசுதேவ நாணயக்கார,உதய கம்மன்பில ஆகியோருடன், பசில் ராஜபக்சவும் குறித்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

நேற்றிரவு(02) நீண்ட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.