கொக்கெய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பிலான குழு அறிக்கை இன்று(25) பிரதமருக்கு…

கொக்கெய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பிலான குழு அறிக்கை இன்று(25) பிரதமருக்கு…

(FASTNEWS | COLOMBO) கொக்கெய்ன் விவகாரம் குறித்த, ஐக்கிய தேசிய கட்சியின் குழுவினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இன்று(25) பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமைச்சரவையில் உள்ளவர்கள் கொக்கெய்ன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ஆராய ஐக்கிய தேசிய கட்சி, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றினை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(iFA)