தேசிய விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைத்திட்டங்கள் அறிமுகம்

தேசிய விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைத்திட்டங்கள் அறிமுகம்

(FASTNEWS | COLOMBO) – தேசிய விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளித்து பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக விவசாயம் பண்ணை வள அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தேசிய விவசாய உற்பத்திகளுக்கு முன்னரிமை அளிப்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். அதுபோல் விவசாயத் துறையை நவீன மயப்படுத்துவதற்காகவும் விரிவான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். நவீன தொழில்நுட்ப முறையின் ஊடாக நச்சுத் தன்மையற்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.