வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் இன்று(11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நிறுவனத்தின் தலைவர் ஹுசைன் பைலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, நிறுவனத்தின் பணிப்பாளர் ரியாஸ் சாலி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.