பேரிக்காய் (Pears) செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

பேரிக்காய் (Pears) செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா மாவட்டத்தில் பேரிக்காய் (Pears) செய்கையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தைக்குத் தேவைப்படும் பேரிக்காய் பழங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் இதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களில் பேரிக்காய் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.