தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு சார்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, சட்டவிரோதமாக பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.