இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தகவல்

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தகவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு தொற்றாளர்கள் குனமடைந்துள்ளதாக பொரளை மருத்துவ ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருக் பண்டார தெரிவித்தார்.

ஏற்கனவே சுகமடைந்து வெளியேறிய மூவருக்கு மேலதிகமாக இந்த நால்வரின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதில் அவர்கள் குணமடைந்திருப்பது தெரியவந்ததாகவும், விஷேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரைப்பார்களாயின் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வீடு செல்ல முடியுமான சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்