இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்கூலியுடன் சேர்த்து ஒரு பவுன் தங்கத்தின் விலை 90000 – 100000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் தங்கம் ஒரு பவுனின் விலை 70,000 ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.