ஹபீசுக்கு மீண்டும் கொரோனா உறுதி

ஹபீசுக்கு மீண்டும் கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஹபீசுக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’என முடிவு வந்துள்ளது எனதெரிவித்த நிலையில், மீண்டும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து செல்லவுள்ளது,

இதன்படி, இங்கிலாந்து செல்ல இருக்கும் 29 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர் குழுவினரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் முன்னாள் தலைவர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹர் ஜமான், ஆல்ரவுண்டர் ஷதாப் கான், புதுமுக பேட்ஸ்மேன் ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்தது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்திய சோதனையில் பிழைகள் ஏற்பட்டதா? என்ற சந்தேகத்தில், மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஹபீசுக்கு கொரொனா இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று அறிவிக்கவுள்ளது.