என்னால் தான் கோட்டா ஜனாதிபதியானார்.. நான் இல்லை என்றால் இன்று பிணமாக இருந்திருக்கும்..

என்னால் தான் கோட்டா ஜனாதிபதியானார்.. நான் இல்லை என்றால் இன்று பிணமாக இருந்திருக்கும்..

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய கடந்த ஆட்சியின் போது திட்டமிடப்பட்டிருந்த கொலைத் திட்டத்தில் இருந்து அவரை தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல்பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்ட நாமல் குமார தெரிவித்திருந்தார்.

குறித்த வெளிச்சத்திற்கு பின்னர் இன்று கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாக உள்ளமை தொடர்பில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த அரசின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு மிகவும் கீழ் மட்டத்திலேயே இருந்தது என்றும் ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் தனக்கு தெரிய வந்ததும் அதனால் தான் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

புதிய அரசின் கீழ் தற்போது வரை குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளது நடவடிக்கைகளில் திருப்தித் தன்மை காணப்படுவதாக நாமல் குமார தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்தளவு முக்கியமான சம்பவம் ஒன்றினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த எனக்கு இதுவரையில் இலங்கையின் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக எந்தவித பாதுகாப்பும் இல்லை என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.