இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி பங்கேற்கவிருந்த கிரிக்கெட் தொடரை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணியின் வீரர் லஹிரு திரிமன்னவிற்கும் கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் ஏனைய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் 18 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.