இன்றும் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

இன்றும் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | மட்டக்களப்பு) – மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சடலங்கள அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சடலங்கள் ரீரங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

சூடுபத்தினசேனை பகுதியில் 9 கொவிட்-19 சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பகுதியில் 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரேத அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனாஸாக்களும் அடுத்துவரும் நாட்களில் கிழக்கிற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.