சுகாதார ஊழியர்களுக்கு வெள்ளி தோறும் எரிபொருள்

சுகாதார ஊழியர்களுக்கு வெள்ளி தோறும் எரிபொருள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கார்கள் மற்றும் வான்களுக்கு 40 லீற்றர் எரிபொருள், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லீற்றர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லீற்றர் வழங்கப்படும்.
இதற்காக,அந்தந்த பிரதேசங்களில் தனித்தனி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.