சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் சித்தீக்கின் விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் சித்தீக்கின் விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முஹமட் சித்திக்கை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சித்திக்கின் வங்கிக் கணக்குகள் தொடர்ந்தும் பரிசோதிக்கப்பட்டு வருவதாக, தெரிவித்தனர்.

இதனால் அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய சந்தேகநபரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.