ஹிருணி உட்பட 9 பேர் நீதிமன்றில் ஆஜர் – டிபென்டரை விடுவிக்க நீதவான் மறுப்பு

ஹிருணி உட்பட 9 பேர் நீதிமன்றில் ஆஜர் – டிபென்டரை விடுவிக்க நீதவான் மறுப்பு

தெமட்டகொடை பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் டிபென்டர் வாகனத்தை விடுவிக்க நீதவான் இதன்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கை மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.