யோஷிதவுக்கு கடற்படையில் விசாரணை கிடையாது

யோஷிதவுக்கு கடற்படையில் விசாரணை கிடையாது

கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் யோஷித ராஜபக்ஷ, சிவில் பிரச்சினை ஒன்றுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனால், அவர் தொடர்பில் கடற்படையினர் எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளப்போவதில்லை என கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேலும், நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமையவே, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.