பெபசுவல் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களுக்கு வரையறை…

பெபசுவல் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களுக்கு வரையறை…

பெபசுவல் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களின் சில பகுதிகளை வரையரை செய்வதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இன்று(08) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேவேளை பிணைமுறி மோசடி சம்பந்தமாக இரண்டு உள்ளக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.