சரணடைய அவகாசம் கேட்டு சசிகலா மனு தாக்கல்…

சரணடைய அவகாசம் கேட்டு சசிகலா மனு தாக்கல்…

சரணடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று(15) முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கூறிய தீர்ப்பை நேற்று(14) உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உடனடியாக சரணடைய வேண்டும் என்பதற்கு பதிலாக, “நான்கு வாரங்களில்” சரண் அடைய அனுமதி வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்வதற்கு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்யப்படும் என்று டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.