சஜினுக்கு தொடரும் விளக்கமறியல்

சஜினுக்கு தொடரும் விளக்கமறியல்

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.  கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.