இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தல்…

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தல்…

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற் தொழிலாளர்களையும் மற்றும் 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு குறித்து அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 42 படகுகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்தமைக்கு பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் நாளைய தினம் இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் தவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில்,கடற்படையின் ஊடக பேச்சாளர் மேஜர் சமிந்த வலாகுலுகேவிடம் வினவியபோது இந்திய கடற் தொழிலாளர்களை கையளிப்பது தொடர்பான எந்த அறிவித்தலும் கடற்படைக்கு வழங்கப்படவில்லையென குறிப்பிட்டார்.