கணவர் அவுஸ்ரேலியாவில்..! மனைவி பற்றை மறைவில்.

கணவர் அவுஸ்ரேலியாவில்..! மனைவி பற்றை மறைவில்.

புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வேலை செய்தும் இரு நண்பர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள தனது கிராமத்திற்கு வந்துள்ளார்.

அவர் வரும் போது அவரது நண்பன் வடமராட்சி கிழக்கில் இன்னொரு கிராமத்தில் உள்ள தனது மனைவிக்கு பொருட்கள் கொடுத்துவிட்டதாகவும் அதனைக் கொடுப்பதாற்காக வந்த நண்பர் அவுஸ்ரேலிய நண்பனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திவிட்டார்.

இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் தனிமையில் சந்தித்துக் கொண்டிருந்த போது அந்த வழியால் முச்சக்கர வண்டிச் சாரதி சென்றுள்ளார்.

அச்சாரதி அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் பற்றை மறைவில் இருப்பதை அவதானித்துள்ளார். அவர் மீண்டும் திரும்பி வந்த போதும் அந்த மோட்டார் சைக்கிள் அதே இடத்தில் இருந்துள்ளது.

அதையும் பொருட்படுத்தாது சென்ற சாரதி மீண்டும் ஒரு மணித்தியாலத்தால் அப்பகுதிக்கு வாடகைக்கு ஆட்களை ஏற்றி வரும் போதும் அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் நின்றதால் சந்தேகப்பட்டு ஆட்களை இறக்கிவிட்டு பற்றைக்குள் நடந்து சென்று பார்த்த போது அவுஸ்ரேலியக் காதலனுடன் குடும்பப் பெண் நிர்வாண நிலையில் நின்றதை நேரில் கண்டுள்ளார்.

அவர்களை ஆட்டோச்சாரதி அச்சுறுத்தவே குறித்த பெண் தனது ஒரு லட்சம் பெறுமதியான சங்கிலியை அவனிடம் கழற்றிக் கொடுத்து மன்றாடியதால் அவன் அச்சங்கிலியுடன் சென்றுவிட்டான்.

அச் சங்கிலியை பருத்திதுறைப் பகுதியில் உள்ள வங்கியில் அடைவு வைத்த சாரதி சில ஆட்டோக்காரர்களை பரந்தனுக்குக் கூட்டிச் சென்று அங்கு மது விருந்து அளித்து இச் சம்பவத்தையும் கூறியுள்ளான்.

இதைக் கேட்ட ஏனைய சாரதிகள் அவனுடன் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டுக்கு வந்து பெண்ணின் தாயிடம் ”உங்கள் மகளின் சங்கிலி எங்கே எனக் கேளுங்கள்” என கூறிய போது தாயும் மகளும் இச் சம்பவத்தை மன்னித்து விடும்படியும் மேலும் ஒரு லட்சம் ரூபா தருவதாகவும் கெஞ்சியுள்ளார்கள்.

இருந்தும் அச் சாரதிகள் வங்கியில் அடைவு வைத்த துண்டை தாயிடம் எறிந்து விட்டு இனிமேல் இவ்வாறான வேலைகள் செய்யாமல் அவுஸ்ரேலியாவில் வியர்வை சிந்தி உழைக்கும் புருசனுக்கு துரோகம் செய்யாமல் இருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இந்த விடயம் ஏனைய ஆட்டோச் சாரதிகளுக்கும் தெரியவரவே ”அட லுாசுகளா!! நாங்கள் லீசிங் பணம் கட்டாமல் திண்டாடுகின்றோம். ஒரு மாதத்துக்கு ஒரு கள்ளக்காதலர்களை இவ்வாறு பிடித்தால் பிரச்சனை இல்லாமல் லீசிங் பணம் கட்டலாமே” என தெரிவிக்கின்றார்களாம்.

  • கள்ளக் காதலர்களே!! கவனம்!! இனிமேல் உங்கள் அந்தரங்கத்தை குத்தகைக்கு எடுத்தவர்களை விட ஏனையவர்களின் குத்தகைப் பணத்தை நீங்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்…