பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!!! (update)

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!!! (update)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று(21) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக குறித்த இந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும் பெறும் செயற்பாடுகள் தற்சமயம் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.