புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளது உடையில் மாற்றம்…

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளது உடையில் மாற்றம்…

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடைகளில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் புகையிரத சேவையின் தரத்தை அதிகரிக்கும் நோக்குடனேயே மேற்படி ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புகையிரத ஊழியர்கள் சிவில் உடைகளில் தங்களின் சேவைகளை முன்னெடுக்கும் போது அநேகமான குற்றச் செயல்களை அடையாளம் காண முடியும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.