எரிபொருள் விலைக் குறைப்புடன் பேரூந்து கட்டணங்களையும் குறைக்க அவதானம்..

எரிபொருள் விலைக் குறைப்புடன் பேரூந்து கட்டணங்களையும் குறைக்க அவதானம்..

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதனைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் பேரூந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேரூந்து சங்கங்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

வெயங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இது குறித்து பேரூந்து சங்கங்கள் இடையே வினவிய போது, அவ்வாறு எவ்வித கலந்துரையாடலுக்கும் தமக்கு போக்குவரத்து அமைச்சர் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் சூழ்நிலையில் பேரூந்து கட்டணத்தினை 4% – 5% வீதங்களால் குறைக்க முடியும் என அனைத்து இலங்கை தனியார் பேரூந்துகள் சங்கத்தின் பிரதம செயலாளர் அங்ஜன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.