சிறுமி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – தென் மாகாண சபை உறுப்பினர் கைது…

சிறுமி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – தென் மாகாண சபை உறுப்பினர் கைது…

(FASTNEWS | COLOMBO) – சிறுமி  ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார அக்மீம பொலிசில் சரண் அடைந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது கடந்த 26ம் திகதி குற்றஞ்சாட்டப்பட்ட்தாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இன்று(28) அவர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார ‘ரத்தரங்’ என்று அறியப்படுகிறார் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.