நிஸ்ஸங்க மற்றும் பாலித பெனாண்டோவுக்கு பிடியாணை

நிஸ்ஸங்க மற்றும் பாலித பெனாண்டோவுக்கு பிடியாணை

(FASTNEWS | COLOMBO) – அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கடல் பரப்பில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை அமைக்கும் பொருட்டு ரூபா 355 இலட்சம் ரூபா இலஞ்ச கொடுக்கல் வாங்கல் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டின் வழக்கிற்கு நீதிமன்றில் இவர்கள் முன்னிலையாக தவறியதாலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.