சாதாரண பயணியான கோட்டாபய

சாதாரண பயணியான கோட்டாபய

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பயணிக்கும் பகுதியிலேயே தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, சாதாரண பயணிகள் விமானத்தில் 10 அதிகாரிகளை மாத்திரம் அழைத்து சென்றுள்ளார்.

குறித்த பயணத்தில் எந்தவொரு அரசியல்வாதியையோ அல்லது அவரது உறவினர்களையோ இணைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாவின் விஜயத்தை முன்னிட்டு தலைநகர் புதுடில்லியில், பல இடங்களில் வரவேற்பு பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.