ஒரு தொகை சிகரட்களுடன் இருவர் கைது

ஒரு தொகை சிகரட்களுடன் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை சிகரட்களை நாட்டிற்கு கொண்டு வந்த இருவர் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 22 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான சிகரட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் றாகம மற்றும் அங்கொட பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என விமான நிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.