வீட்டிலிருந்து சிகிச்சை பெற புதிய வழிமுறைஅறிமுகம்

வீட்டிலிருந்து சிகிச்சை பெற புதிய வழிமுறைஅறிமுகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதற்காக விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள நோயாளர்கள் 077 077 33 33 என்ற தொலைபேசி இலக்கத்தின் வாயிலாகபயன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.