உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவினால் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பானது சீன நாட்டினருக்கு மாத்திரம் சாதகமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி டொனல்ட் ட்ரம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பிற்கு 58 மில்லியன் ரூபாய் நிதியுதவியளிக்க அமெரிக்கா தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.