தொலைபேசியில் தாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்

தொலைபேசியில் தாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடிகர் மோகன்லால் தாதிமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராஜியத்தில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலரும், அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு வைத்தியர்கள், தாதிமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அபுதாபி, துபாய், சார்ஜா மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ‘கொரோனா’ சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் தாதிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றும் தாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் சேகரிக்கப்பட்டு நடிகர் மோகன்லாலிடம் கொடுக்கப்பட்டது.

திட்டமிட்டபடி அந்த தொலைபேசி இலக்கங்களில் ஒவ்வொரு தாதியையும் நடிகர் மோகன்லால் தொடர்பு கொண்டு பேசினார்.

இதனை சற்றும் எதிர்பாராத தாதிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இந்த அவசர நேரத்தில் பணியாற்றும் நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என பாராட்டு தெரிவித்தார்.