இன்று முதல் அனுமதி

இன்று முதல் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, மத வழிபாட்டிடங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள, இன்று (12) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதகாலமாக  மத வழிபாட்டிடங்களில்  மக்கள் ஒன்றுகூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், மேற்படி தடை தளர்த்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிமுறைகளுக்கமைய மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, மத வழிபாட்டிடங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.