மின் கட்டணத்தை பார்த்து கொந்தளித்த கார்த்திகா

மின் கட்டணத்தை பார்த்து கொந்தளித்த கார்த்திகா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தியுள்ள ஊரடங்கு காலத்தில் ஒரு இலட்சம் ரூபா மின் கட்டணம் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.

கோ படத்தில் மூலம் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கார்த்திகா நாயர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் கார்த்திகா நாயர் அதிக மின் கட்டணம் தொடர்பாக டுவிட்டரில் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது..
“என்ன விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜூன் மாத மின் கட்டணம் மட்டும் ஒரு இலட்சம்.. (அவர்களால் மீட்டர் ரீடிங் செய்ய முடியாத நிலையில், அவர்களின் தோராய கணக்கு படி) மும்பையில் இருக்கும் மற்ற பலரிடம் இருந்தும் இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்” என கார்த்திகா நாயர் அந்த குறிப்பிட்டுள்ளார்.