அடுத்த பிரதமர் பொலன்னறுவையில் இருந்து..

அடுத்த பிரதமர் பொலன்னறுவையில் இருந்து..

(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை) – இலங்கையின் அடுத்த பிரதமர் பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து என பொலன்னறுவை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் அங்கங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாக உள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொலன்னறுவை மாவட்டத்தில்தான் இம்முறை போட்டியிடுகிறார்.

எனினும் இந்த சுவரொட்டிகள் யாரால் ஒட்டப்பட்டுள்ளன என்பது தொடர்பிலான விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.