மஹிந்த 2 கோடி எப்படி செலவு செய்தார்

மஹிந்த 2 கோடி எப்படி செலவு செய்தார்

மஹிந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.

டொலர்களில் செலவிடப்பட்ட இந்த பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான சாட்சியம் தற்போது கிடைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவில் முக ஒப்பனை(பேஷியல்) செய்து கொள்வதற்காக ஒப்பனை கலைஞர்களுக்கு மாத்திரம் 43 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளார்.

கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் கலந்து கொள்ளும் அமெரிக்க விஜயம் சம்பந்தமானது என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள  ஒரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியின் செயலாளர்
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு 01
2014 ஆகஸ்ட் 20

இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தின் போது, அவரது தனிப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக கீழ்காணும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகிறேன்.

கௌரவ ஜனாதிபதியின் பிரதான மருத்துவருக்கு- 20 ஆயிரம் டொலர்கள்.
உதவி மருத்துவர்கள் குழுவிற்கு- 50 ஆயிரம் டொலர்கள்.
உணவு மற்றும் பானங்களை வழங்கும் பிரதான சமையல்காரருக்கு – 15 ஆயிரம் டொலர்கள்.
உதவி சமையல்கார்களுக்காக- 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.
கௌரவ ஜனாதிபதியின் பிரதான ஒப்பனை கலைஞர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு – 30 ஆயிரம் டொலர்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக நீங்கள் கவனம் செலுத்தி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன்.

நன்றி,
சஜின் வாஸ் குணவர்தன (பா.உ)
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்

 

mahinda_letetr